சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் நேரடியாக தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு ஜூலை 26ம் தேதியும், JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…