#BREAKING: சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் – இஸ்ரோ

Published by
பாலா கலியமூர்த்தி

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சாதகமான சூழல் இல்லை என்றால் லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சந்திரயான் 3 செயல்பாடு திருப்திகரமாக உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எனவே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், நிலவில் இருந்து 70 கிமீ உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்து புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் எடுத்துள்ள இந்த புதிய புகைப்படங்கள் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும். இதனிடையே, சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திரயான் -3 தரையிறங்குவது ஆக.27க்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டபடி நாளை மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

18 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

37 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

2 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago