#BREAKING: முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் – கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபாரம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் இருந்து விலக மறுத்த நீதிபதி கௌஷிக் சந்தா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நந்திகிராமில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி கௌஷிக் சந்தா விசாரிக்க முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் தன்னை சுவேந்து அதிகாரி தோற்கடித்ததை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் தனது மனுவை நீதிபதி கௌஷிக் சந்தா விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கௌஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றசாட்டியிருந்தார். ஆகையால், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

11 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

24 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago