ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.சென்னையில் இருந்து கிழக்கு – வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக, தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் முன்னதாக அறிவித்தது.
இந்நிலையில்,அடுத்ததாக ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து மேற்கு-தென்மேற்கில் 106 கிமீ தொலைவில் இன்று காலை 11:15 மணியளவில் மிதமான அடர்த்தி கொண்ட நில அதிர்வு ஏற்பட்டது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
மேலும்,இது தொடர்பாக இன்று காலை 11:15 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு கொண்ட நில அதிர்வு ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு 106 கிமீ மேற்கு-தென்மேற்கில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல,அருணாசலப் பிரதேசம்,பாங்கினுக்கு வடக்கே 1193 கிமீ தொலைவில் இன்று காலை 05:08 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…