ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய அவர் ” பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம். என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது” […]
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டன. இதனை பிரதமர் மோடிராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே முதல் பின்னடைவு ஏற்பட்டது. டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார். ஆயுஷ் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்,கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தானும், சென்னையும், ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இன்று ஆறுதல் வெற்றிக்காக இந்த ஆட்டத்தை விளையாட போகின்றனர். கடைசி போட்டி என்பதால் ராஜஸ்தான் […]
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, […]
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இதேபோல் டிசம்பர் 11 ஆம் தேதி ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன், மூன்று நாள் கழித்து நீண்ட நேரம் மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். ஆனால், சிறுவன் இறந்துவிட்டதாக […]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலி மாவட்டம் ரயில் பாலத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற தம்பதியர், ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, 90 அடி ஆழமான பள்ளத்தில் குதித்தனர். ரீல்ஸ் மற்றும் செல்பீ எடுப்பதற்காக பலரும் ஆபத்தை உணராமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி தான், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த போது, தம்பதியினர் தங்கள் உயிரைக் காப்பாற்ற 90 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலத்தில் […]
ராஜஸ்தான் : பலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கடைசியாக காவல்துறையிடம் கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது எஸ்யூவியின் காருக்கு டீசல் போடும்போது மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வைரலாக பரவிய வீடியோவில் நபர் ஒருவர் தனது காருக்கு டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்து டீசல் டேங்க் முழுவதுமாக […]
ராஜஸ்தான் : மாநிலத்தில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் லால் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவி, லால் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் செவ்வாய்க்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, புதன்கிழமை 2:30 மணியளவில் மனைவி தேவி ஆவிகளுடன் தொலைபேசியின் மூலம் […]
ஜெய்ப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தான் செரிஸ். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான போலியான நகைகளை வாங்கியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் இருக்கும் ஜோரி பஜாரில் கவுரவ் சோனி கடை உள்ளது. செரிஸ், தனது இன்ஸ்டாகிராம் மூலம் கவுரவ் சோனி என்ற நகைக்கடைக்காரரின் தொடர்பு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்த கடையில் தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஸ் வாங்கியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த […]
ராஜஸ்தான் : வேகமாக மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்து ரோமன்ஸ் செய்துகொண்டு சென்ற காதல் ஜோடியை காவல்துறை கைது செய்தது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோ வைரலாவது வழக்கம். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி ஒன்றும் அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அவர்கள் இருவரும், பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில், ஜோடி […]
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விரைந்துனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்திய விமானப் படையினர் வழக்கமான […]
plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அண்மையில் அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், […]
ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர்பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று ஜெய்ப்பூர் வருகிறார்கள். இன்று முதல் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில், சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் […]
2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், […]
5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…! அதன் […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]