நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால்,கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.எனினும்,மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில்,கொரோனாவின் தொற்று குறைந்து வருவதையொட்டி மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில்,மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில்,டெல்லி,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,மிசோரம் உள்ளிட்ட மானிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இதனால்,இந்த ஐந்து மாநிலங்களுக்கு,கொரோனா தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும்,கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,டெல்லியில் 1.42 விழுக்காடாக இருந்த கொரோனா பரவல் தற்போது 3.49 விழுக்காடாக அதிகரித்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு டெல்லி துணை ஆளுநர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை இன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில்,டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…