மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்திருந்தது.
இதையடுத்து, ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கக்கூடாது என பலவேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்த நிலையில், பல்வேறு மாநில அரசுகள் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளுக்கான செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…