நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த ஆண்டு தரவுகளின் படி காற்று தரக் குறியீடு மோசமாக இருந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் இன்று நள்ளிரவு (நவம்பர் 9-ஆம் தேதி ) முதல் நவம்பர் 30 -ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க டெல்லி, ஓடிசா மாநிலங்கள் தடை விதித்திருந்த நிலையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…