#BREAKING : பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

Published by
லீனா

சஞ்சய் தத் முன் விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 1993-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பின் ஐந்து ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது.

மேலும் அவருக்கு சிறையில் இருந்தபோது பல முறை பரோலும் வழங்கப்பட்டது. இறுதியில் இவர் சிறைவாசம் முடிவதற்கு 256 நாட்களுக்கு முன்பதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் தத் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள பேரறிவாளன் தரப்பினர் விரும்பினர். இதனையடுத்து, இது சம்பந்தமாக  உத்தரவுகளை மகாராஷ்டிரா அரசு பிறப்பிக்க கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மும்பை உயர்நீதிமன்றமானது மகாராஷ்டிரா அரசு  உரிய பதிலளிக்க கூறியிருந்தது. இந்நிலையில், சஞ்சய் தத் முன் விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கானது அடுத்த வாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

5 minutes ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

59 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

1 hour ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago