பி.எஸ் -4 ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி – உச்சநீதிமன்றம் .!

Published by
murugan

கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4  வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது.  தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக வாகனங்கள் என விற்கமுடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால், 6,300 கோடி தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விற்பனையாளர்கள் கூட்டமை  தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.  சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மறு உத்தரவு வரும்வரை BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஊரடங்கிற்கு பிறப்பிப்பதற்கு முன் அதாவது மார்ச் 31-ம் தேதிக்கு முன் விற்கப்பட்ட பிஎஸ் 4 வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதி என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

 BS-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த BS-4 ரக வாகனங்களை விட BS-6 வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும். மேலும், BS-6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளது.

இதனால், BS-5 என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-6 விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள்  BS-6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Published by
murugan

Recent Posts

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

5 minutes ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

9 minutes ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

1 hour ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

3 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

3 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

3 hours ago