ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17,000 கோடியை விடுவித்துள்ளது.அதன்படி, தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.3053.5959 கோடியும், கர்நாடகா மாநிலத்துக்கு ரூ.1602.6152 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும்,குஜராத்துக்கு ரூ.1428.4106 கோடி,கேரளாவுக்கு ரூ.673.8487 கோடி என பிற மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் இதுவரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 60,000 கோடி ஆகும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்,ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு பதிலாக ரூ.1.59 லட்சம் கோடி கடன் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…