#BREAKING : பிரதமரை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏ-க்கள்…! பேசியது என்ன…?

Published by
லீனா

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, பாஜகவின் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசினர். 

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் உள்ள  மகாபலிபுரம்,தஞ்சை போன்ற ஆன்மீக சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசியலில் தேசத்துக்கு எதிரான செயல்பாடுகள் இருப்பதையும் சொல்லியுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசியதாக கூறியுள்ளார்.

மேலும், நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசினோம். எங்களிடம், தண்ணீரை சேமிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள் என்றும், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார் என தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்கள் அவரிடம் நீட் சம்பந்தமான கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தடை செய்ய முடியாது என தெரிந்தும் திமுக அதை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்தது. இதற்காக குழு அமைத்தனர். அந்த குழு நீட்டின் சாதகங்களை கேட்காமல், நீட் பாதிப்பை மட்டும் ஆராய குழு அமைத்துள்ளனர். அவரால் முடியாது என தெரிந்து, சாக்குபோக்கு சொல்வதற்காக தான் இந்த குழுவை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

43 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago