புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரம் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிப்பு.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதிதீவிர சிகிச்சையும், உயர் அழுத்த பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிக்க தேவைப்படுகிறாரகள் என கூறியுள்ளனர்.
எனவே, கொரோனா நோயாளிகளை பாதுகாக்கவும் வெளிப்புற நோயாளி பிரிவிற்கு வரும் கொரோனா இல்லாத நபர்களை பாதுகாக்கவும், தொற்று பரவலை தடுக்கவும் வரும் 26ஆம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்துவித நேரடி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு (O.P) தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். மேலும், அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…