#BREAKING: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்? நந்திகிராம் தொகுதியில் மம்தா முன்னிலை!!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகள் முடிந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 88 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலை அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவை நுழைய விடமாட்டேன் என மம்தா பானர்ஜி சவால் விட்டிருந்தார்.

இதனிடையே, மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் முன்னிலை பெற்று வந்தார்.

இந்த நிலையில், காலையிலிருந்து பின்னணியில் இருந்த மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் முன்னணிக்கு வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு முன்பு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த பாஜக கட்சியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி பின்னடைவை சந்தித்துள்ளார்.

தற்போது, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்று வருகிறார். இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago