Categories: இந்தியா

செயல் இழந்த பேருந்து பிரேக் … ..பீதியில் கீழே குதித்த பயணிகள்..! வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

ஜம்மு காஷ்மீர் : அமர்நாத் யாத்ரீகர்கள் பயணத்தின் போது பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் பெரும் விபத்தில் பயணிகள் தப்பினார்கள். தேசிய நெடுஞ்சாலை 44 இல் ராம்பன் மாவட்டத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. அங்கு அமர்நாத்திலிருந்து 40 பயணிகள் ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்குபேருந்து ஒன்று சென்றது.

ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த அந்த  பேருந்து அதன் பிரேக்கை இழந்தது, இதனால் 40 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. முயற்சியில் யாத்ரீகர்கள் நகரும் பேருந்தில் இருந்து வேகமாக குதிக்கவும் தொடங்கினார்கள். கீழே விழுந்தவர்களுக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டது. இருப்பினும், பேருந்தில் பலரும் இருந்த நிலையில், பேருந்து நிற்காமல் மெதுவாக பள்ளத்தாக்கை நோக்கி சென்றது.

அதிர்ஷ்டவசமாக, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் உடனடி நடவடிக்கையால், பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் சிக்காமல் தடுக்கப்பட்டது.பிரேக் செயலிழந்ததால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் நாச்லானா, பனிஹால் அருகே வாகனத்தை நிறுத்த டிரைவர் சிரமப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர்.

துகாப்புப் பணியாளர்கள் மூலோபாயமாக பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் கற்களை வைத்து பேருந்தை நிறுத்தினார்கள். இச்சம்பவத்தில் ஆறு ஆண்கள், மூன்று பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தின் விரைவு எதிர்வினைக் குழுக்கள் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago