புரி ஜெகநாதர் கோவிலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர் பி.டெக். பட்டதாரி…காவல்துறையினரை தூக்கி வாரி போட்ட திடுக்கிடும் சம்பவம்..

Published by
Kaliraj
  • பி டெக் பட்டதார் கோவிலில் பிச்சைகாரராக இருந்த உண்மை சம்பவம்.
  • காவல்துறையினரின் விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள்.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. இங்குள்ள பிரபல  புரி  ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் தான் இந்த  வியக்க வைக்கும் நிகழ்வு அரங்கறியுள்ளது. புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக தினமும்  பிச்சை எடுக்கும் இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரர்  தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்த இடத்தில் தினமும் பிச்சை எடுத்து வருவது குறித்த வாய் வார்த்தையில் தொடங்கி, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த  வாய்த்தகராறு, சிறிது நேரத்தில் அடிதடியாக மாறியது. இதில் அந்த பிச்சைக்காரர் தாக்கியதில், ரிக்ஷாக்காரருக்கு பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இந்த சம்வம் குறித்த  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது  இருவரிடமும் புகார் மனு தருமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

 

Image result for கிரிஜா சங்கர் மிஸ்ரா பிச்சைக்காரன்

அப்போது அந்த பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, சட சட என  அருமையாக ஆங்கிலத்தில் சரளமாக தனது புகார் மனுவை எழுதினார். அதைப் பார்த்த காவல்துறையினர்  ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து, அவரிடம் தோண்டித் துருவி விசாரணை நடத்தினர். அப்போதுதான், அந்த பிச்சைகாரரின் உண்மையான நிலை மற்றும் அவரது  பின்னணி தெரியவந்துள்ளது. இந்த பிச்சைகாரர்  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரின் மகன் தான் இந்த பிச்சைகாரர்  என்பதும் இவர் ஒரு  பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தனது படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலிருந்து வெளியேறி புரி ஜெகநாதர் கோவிலுக்கு  வந்து பிச்சை எடுத்து வந்தார் என்பதையும் காவல்துறையினர் தெரிந்துகொண்டனர்.  இதையடுத்து, அவரது குடும்பத்தினரை கண்டறிந்து  இவரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

27 seconds ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

1 hour ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

2 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago