JammuBusAccident [File Image]
ஜம்முவில் பேருந்து விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பீகார் முதல்வர் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் .
ஜம்மு காஷ்மீர்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கிச் சென்ற பேருந்து, ஜஜ்ஜார் கோட்லி அருகே உள்ள பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான பேருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றுச் சென்றுள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், பீகாரின் லக்கிசராய் மற்றும் பெகுசராய் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜஜ்ஜார் கோட்லியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் பீகாரில் வசிக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…