Categories: இந்தியா

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு..75 ஆண்டுகளில் இல்லாத அளவில் தேர்ச்சி.!

Published by
கெளதம்

சி.ஏ. தேர்வு முடிவு : பட்டயக் கணக்காளர் பணிக்கான சி.ஏ. இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் நடந்த இத்தேர்வுகளை சுமார் 4.50 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனுடன், சி.ஏ. இன்டர் மீடியேட் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை இந்திய பட்டய கணக்காளர்களின் நிறுவனம் (ICAI) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை www.icai.nic.in அல்லது icai.org என்கின்ற இணையதளங்களில் சென்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவாக 20,446 பேர் தேர்ச்சியடைந்து பட்டயக் கணக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

ஆம், வழக்கமாக 13,000 முதல் 15,000 பேர் வரையே இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால், இந்த முறை 75 ஆண்டுகளில் இல்லாத அளவாக 20,446 பேர் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக, டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா 83.33% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் டெல்லியைச் சேர்ந்த வர்ஷா அரோரா 80% மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்திலும், மும்பையை சேர்ந்த கிரண் ராஜேந்திர சிங், கில்மான் சாலிம் ஆகியோர் 79.50% மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

11 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

50 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago