சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது.!19,500 பதிவுகள் மீது பாய்கிறது நடவடிக்கை

Published by
kavitha
  • குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது
  • 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது பாய்கிறது  நடவடிக்கை

குடியுரிமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு தற்போது சட்டமாகி உள்ளது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.மேலும் மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் கலவரமாக மாறி இரயில் மற்றும் பேருந்துகள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தற்போது நிலைமை சீராகி வருவதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்டம் தொடர்பாக போராட்டம் வெடித்து கொண்டிருக்கும் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேரை உத்திரபிரதேச போலீசார் கைது செய்து உள்ளனர்.மேலும் 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.ஒரு சில தினத்திற்கு முன்னர் தான் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திவர்களின் சொத்துக்களை உத்திர பிரதேச போலீசார் முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recent Posts

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

36 minutes ago

அகமதாபாத் விமான விபத்து : ‘இழப்பீடு இல்லை’ என மிரட்டுவதாக எழுந்த புகார்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…

1 hour ago

பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை நீக்குங்க… மனு அளித்த பாமக எம்எல்ஏக்கள்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…

2 hours ago

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

2 hours ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

4 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

4 hours ago