#BREAKING: 10,11,12-ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் CBSE 12ம் வகுப்பு மதிபெண்கள் கணக்கீடு..!

Published by
murugan

+2 சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 10, 11-ம் வகுப்புகளில் இருந்து தலா 30%, 12ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் வரவேற்றது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு கடந்த 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறையை குறித்து பரிந்துரை செய்த 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் அந்த குழுவானது அறிக்கை அளித்துள்ளனர்.

அதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 பாடங்களில் நடைபெற்ற தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற மூன்று மதிப்பெண்களில் 30 சதவீத மதிப்பெண்களும், 11 வது வகுப்பில் வகுப்பில் பாடங்களில் 30 சதவீத மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் யூனிட், பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதம் மதிப்பெண்களும் என வெயிட்டேஜ் முறையில்  சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக்கப்படும் என சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுக்கு 100 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
murugan
Tags: CBSE

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

7 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago