30 வினாடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கலாம் ? இந்தியா – இஸ்ரேல் பரிசோதனையில் தீவிரம்

Published by
Venu

கொரோனாவை  30 வினாடிகளில் கண்டறியும் சோதனையில் இந்தியா-இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை முறை  கொரோனாவை கண்டுபிடிக்க இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இதன் முடிவு வர சில மணி நேரம் ஆகும்.எனவே இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து  30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை  கூட்டாக உருவாக்க உள்ளது.இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு  மற்றும்  இந்தியாவின்  டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியில்  ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிஅமைப்பு மற்றும் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே விஜயராகவன் குழுவுடன் இணைந்து 30 வினாடிகளில் கொரோனாவை  கண்டறியும் அதிவிரைவு பரிசோதனைக்கருவியை உருவாக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மல்கா  டாக்டர் ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட சிறப்பு சோதனை தளத்தை பார்வையிட்டார்.  மல்காவுடன் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே விஜயராகவன் உடன் இருந்தார்.அப்போது பேசிய மல்கா, “இந்த சோதனைகளில் ஒன்று கூட அரை நிமிடத்திற்குள் வைரஸைக் கண்டறிவதில் வெற்றிகரமாக இருந்தால், இது உலகம் காத்திருக்கும் கொரோனா அடையாளத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.”மேம்பட்ட இஸ்ரேலிய மற்றும் இந்திய தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் உற்பத்தி வலிமையை இணைப்பதன் மூலம், ஒரு தடுப்பூசி உருவாகும் வரை நம் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் வைரஸுடன் இருப்பதற்கும் ஒரு வழியைக் காணலாம்” என்று அவர் கூறினார்.

பேராசிரியர் விஜய் ராகவன் கூறுகையில், இந்த ஆழமான ஒத்துழைப்பில் அதிநவீன அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு மொழிபெயர்ப்பது காணப்படுகிறது.இத்தகைய வலுவான சோதனைகள் அறிவியலின் தொடுகல்லாகும், “என்றார்.விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் இஸ்ரேலும் இந்தியாவும் ஒத்துழைப்பைப் பகிர்ந்துகொள்கின்றன என்று கூறினார் விஜயராகவன். பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பும் நம்பிக்கையும், நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் வேகத்தோடும் தரத்தோடும் நிகழ்த்தியுள்ளன என்றார்.”இவற்றில் சில வெற்றிகரமாக அமையும், இதன் விளைவாக நம் நாடுகளுக்கும் மனிதகுலத்திற்கும் பெரும் மதிப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேல்  நாட்டின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த, 20 நிபுணர்கள், இந்தியா  வந்தடைந்தனர்.அவர்களுடன், அதிநவீன மருத்துவ உபகரணங்களை, இஸ்ரேல் அரசு, இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

2 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

3 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

3 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

4 hours ago