Categories: இந்தியா

Cauvery Issue: காவிரி நீர் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து கட்சி எம்பிக்களுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்ததற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். போதிய நீர் இல்லாததால் உத்தரவின்படி தற்போது நீர் திறக்க இயலாது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க பலமுறை உத்தரவிட்டும் அதனை பின்பற்ற முடியாது என கர்நாடக அரசு மறுத்திவிட்டது .

ர்நாடக அரசு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு தண்ணீர் தர கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து,  காவேரி மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனாலும், தங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

இந்த சமயத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் தான் எங்களது ஒரே நம்பிக்கை என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

4 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

5 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

6 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

6 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

7 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

8 hours ago