Categories: இந்தியா

காவிரி விவகாரம்.. கர்நாடகாவில் முழு அடைப்பு.! இந்த மாவட்டத்தில் மட்டும் ‘பந்த்’ இல்லை..!

Published by
மணிகண்டன்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்தபடி, உரிய  அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் ஆளும் கட்சியை தவிர பல்வேறு அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது இருந்தனர்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 29) முழு அடைப்பு போராட்டத்திற்கு 1600க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அழைப்பு விடுத்தது இருந்தன.

அதன்படி, இன்று காலை முழுதலே பெங்களூரு, சிக்மகளூர் என கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதலே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களை கொண்ட தக்ஷணா கன்னடா மாவட்டத்தில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அன்று இன்று காலை முதலே வழக்கம் போல வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், கடைகளும் பெரும்பாலான இடங்களில் திறந்தே இருந்தது. இதனால் பொதுமக்கள் வழக்கம் போல தங்கள் தினசரி பணிகளை செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் பந்த் நடைபெற்று வருவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல தமிழகத்தில் இருந்து இன்று கர்நாடகாவுக்கு எந்த பேருந்து, வாகன சேவையும் இயக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

19 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

18 hours ago