Cauvery issue [File Image]
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் விடுப்பு காரணமாக வழக்கு விசாரணை செப்.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் தமிழக அரசு கேட்டுள்ள தண்ணீர் மற்றும் காவிரி ஆணையம் திறக்க சொல்லி உத்தரவிட்டிருந்த வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை திறந்து விட முடியாது என்றும்,
அதற்கு பதிலாக 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலிறுத்தியுள்ளோம். தொடர்ந்து, காவிரி நதியின் வறட்சி, நீர்பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிடவேண்டும். கர்நாடகாவின் 4 அணைகளில் உள்ள காவிரி நதி நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு உரிய கணக்கீடுகள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்துள்ளது. முதலில் நீர்பற்றாக்குறை, மழை அளவு போன்ற தகவல்களை சரியாக தெரிந்து கொள்ளவேண்டும். தவறான தகவல்களை வைத்துக் கொண்டு உரிய கணக்கீடுகள் இல்லாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…