Supreme court of India [Image source : ANI]
காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிட கோரும் தமிழக அரசின் மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது, 30 ஆண்டு சராசரி நீர் விருப்புடன் ஒப்பிட்டு பற்றாக்குறை கால பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் காவிரி ஆணையம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 12 முதல் 26ம் தேதி வரை 1.49 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…