Categories: இந்தியா

சிபிஐ(எம்) தலைவர் சுட்டுக் கொலை..! உள்ளூர் மக்கள் போராட்டம்..!

Published by
செந்தில்குமார்

சிபிஐ(எம்) தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டார். ராஞ்சியில் உள்ள தலதாலி சௌக்கில் சிபிஐ(எம்) தலைவர் சுபாஷ் முண்டா தனது அலுவலகத்தில் இருந்துள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தினர் மற்றும் சாலையில் போக்குவரத்தைத் தடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் போராட்டம் நடத்தியதுடன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட சுபாஷ் முண்டா இரண்டு முறை ஹதியா தொகுதியிலும், மாந்தர் தொகுதியில் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

1 second ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

28 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

40 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

58 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago