டெல்லி:வாழ்க்கைத் துணையின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மேலும்,மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற,புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதிய பயனர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய ஓய்வூதியத்துறையின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தபின், டாக்டர் ஜித்தேந்திர சிங் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதை செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது.ஓய்வூதியதாரர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்கள் தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனர்.
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவரது வாழ்க்கைத் துணையுடன் சேர்த்து கூட்டு வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என தலைமையகம் கருதினால், இந்த விதிமுறையை தளர்த்தி கொள்ளலாம். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…