தமிழக அரசின் கோரிக்கை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல்..!

Published by
murugan

குளிர்காலக் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார்.
இவர்கள் சந்திப்பின் போது முக்கிய கோரிக்கையாக மத்திய  அரசு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது கோரிக்கையை வைத்தனர். ஏனென்றால் இந்த மசோதவிற்கு  தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பல்வேறு விவகாரங்களில்  தமிழக அரசின் நடைவடிக்கைகளுக்கு இந்த மசோதா எதிராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் தமிழகம் ஏற்கனேவே கேரள , கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நதிநீர் கணக்கிட்டு தொடர்பான பிரச்சனையில்  இருக்கும்போது  இந்த மசோதா சரியாக இருக்காது.
அதிலும் குறிப்பாக முல்லை பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அதன் பரம்பரிப்பு தமிழகத்தில் உள்ளது.அணியில் உள்ள நீர் மற்றும் அணையில் இருந்து எடுக்கப்படும் மின்சாரமும் தமிழகம் தான் பயன்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட  சூழ்நிலையில் புது மசோதா மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது  என தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது.
இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசின்  கோரிக்கையை ஏற்று மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
 

Published by
murugan

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

15 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

51 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago