கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை இந்தியாவில் மட்டும் 150,793 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் இந்தியாவின் சில மாநிலங்களில் தீடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் நேற்று காணொலி காட்சி உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆரோக்கியா சேது செயலியின் நன்மைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
எளிதில் தாக்கும்படியுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தனி கவனம் செலுத்தும்படி பேசப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற நோயாளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…