மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில சானிடைசர்களில் அதிகளவு நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அவர்கள் பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்ததாகவும், அவற்றில் 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் பொருந்தவில்லை. எனக்குவம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. மேலும் இவைகளில் 4% நச்சுதன்மை கொண்ட மெத்தனால் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சானிடைசர்கள் மாதிரியானது, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நவி மும்பை, தானே, சந்தையில் கிடைத்தவை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகும். அவைகளை பாட்டிலில் பதியப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அதன் உட்பொருட்களுடன் பொருந்துமா என்பதையும், பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்குமா என்பதையும் சரிபார்க்க அவர்கள் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அறியப்பட்ட மேற்கண்ட முடிவுகளின் படி, இது மீளமுடியாத பார்வை நரம்பு பாதிப்பு மற்றும் கண்பார்வை பறிபோகுதல் போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…