மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில சானிடைசர்களில் அதிகளவு நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அவர்கள் பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்ததாகவும், அவற்றில் 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் பொருந்தவில்லை. எனக்குவம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. மேலும் இவைகளில் 4% நச்சுதன்மை கொண்ட மெத்தனால் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சானிடைசர்கள் மாதிரியானது, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நவி மும்பை, தானே, சந்தையில் கிடைத்தவை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகும். அவைகளை பாட்டிலில் பதியப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அதன் உட்பொருட்களுடன் பொருந்துமா என்பதையும், பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்குமா என்பதையும் சரிபார்க்க அவர்கள் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அறியப்பட்ட மேற்கண்ட முடிவுகளின் படி, இது மீளமுடியாத பார்வை நரம்பு பாதிப்பு மற்றும் கண்பார்வை பறிபோகுதல் போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…