சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர்!

Published by
Rebekal

சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி அவர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடைபெறும் 82 வது சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஜனநாயகம் என்பது இந்தியாவின் அமைப்பு மட்டுமல்ல, அது இந்தியாவில் இயல்பான ஒன்று.

வரும் ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே அனைவரும் ஜனநாயக முறையில் ஒற்றுமையாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நிறுத்தப்பட்ட பெரிய வளர்ச்சி திட்டங்களை மீண்டும் நிறைவேற்றி முடிப்பதற்கும் ஜனநாயகம் தான் உதவும்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது இந்தியா வெற்றி பெறுவதற்கும் அனைவரும் ஜனநாயகத்தின் படி ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டது தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா தற்போது 110 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக தோன்றியது தற்பொழுது சாத்தியமாகி உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago