heavy rain [file image]
ரெமல் புயல் : மே 26-27 ஆகிய தேதிகளில் 5 மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை (மே 24) மாலை தீவிர புயலாக வலுப்பெறும். எனவும், இந்த புயலுக்கு ரெமல் (REMAL) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பின்னர், 26-ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 102 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் , இந்த புயலின் காரணமாக மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா, மிசோரம், திரிபுரா மற்றும் தெற்கு மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மே 26-27 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மே 27ஆம் தேதி வரை வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், இதுவரை கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…