நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மறுபெயரிட வேண்டும் என குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது. இதற்கிடையில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியடைந்தது. இதனால், இந்தியாவின் பெண்கள் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணிகள் நாடு முழுவதும் பாராட்டப்படுகின்றன.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை கேல் ரத்னா விருதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக, சிறந்த ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் நாட்டின் விளையாட்டுத்துறையில் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது. இனிமேல் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் விருது வழங்கப்படும் என இன்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பிரதமர் மோடி, மேஜர் தயான் சந்த் இந்தியாவுக்கு பல கவுரவங்களை அளித்துள்ளார். அவர் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். பல முறை அவர் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நாட்டில் பலர் கோரியிருந்தனர். பொது உணர்வை அங்கீகரித்து, கேல் ரத்னா விருது இப்போது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என மறுபெயரிடப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தனது டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர்தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மறுபெயரிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…