Delhi Metro [Image Source : hindustantimes]
தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் வந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில், அவரை தொடர்ந்து, தற்போது இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயிலில் செய்த செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அந்த இளைஞர் சுயஇன்பம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் டிவிட்டரில் “டெல்லி மெட்ரோவில் ஒரு நபர் வெட்கமின்றி சுயஇன்பத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது. இது முற்றிலும் அருவருப்பானது மற்றும் வேதனையானது.
இந்த வெட்கக்கேடான செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்” என கூறியிருந்தார். இதனையடுத்து, போலீசார் தானாக எடுத்துக்கொண்டு ஐபிசி 294 பிரிவின் கீழ் மெட்ரோ ரயிலில் சுய இன்பம் செய்த அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இந்த வீடியோவை ரயிலில் பயணித்த மற்றொரு பயணி பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒருவர் தனது போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அவர் அருகில் இருந்த மற்ற பயணிகள் மிகவும் அசௌகரியம் அடைந்து அவரிடமிருந்து விலகிச் சென்றனர்.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…