2050ஆம் ஆண்டிற்குள் சென்னை, மும்பை, போன்ற ஏழு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன்மூலம், 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை நோக்கி இருப்பதாக கூறினார்கள்.
இது தொடர்பான ஆய்வுகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதில் பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நாடுகள், 75% ஆசிய கண்டத்தை சேர்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் 2050க்குள் கடல்நீர்மட்ட உயர்வால், உலக அளவில் சுமார் 30 கோடி மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதில் இந்தியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 6 நாடுகள் இந்த ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவின் கடலோர மாவட்டங்களான சென்னை, மும்பை , கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதற்க்கான காரணம், கார்பன் உமிழ்வு என்று கூறினார். மேலும் இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால், நாம் கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…