2050ஆம் ஆண்டிற்குள் சென்னை, மும்பை, போன்ற ஏழு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன்மூலம், 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை நோக்கி இருப்பதாக கூறினார்கள்.
இது தொடர்பான ஆய்வுகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதில் பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நாடுகள், 75% ஆசிய கண்டத்தை சேர்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் 2050க்குள் கடல்நீர்மட்ட உயர்வால், உலக அளவில் சுமார் 30 கோடி மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதில் இந்தியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 6 நாடுகள் இந்த ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவின் கடலோர மாவட்டங்களான சென்னை, மும்பை , கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதற்க்கான காரணம், கார்பன் உமிழ்வு என்று கூறினார். மேலும் இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால், நாம் கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…