இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியில் காலாவதி தேதி குறிப்பிட படாததால் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் எனவும் சத்தீஸ்கர் அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காகவும் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் வழங்கப்பட்டும் வருகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசியை தங்களுக்கு அனுப்ப வேண்டாம் என சத்தீஸ்கர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏனென்றால் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவாசின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை எனவும், எனவே அதன் செயல்திறன் முழுவதுமாக உறுதிப்படுத்தப்படாததாலும் கோவாக்சின் தடுப்பூசியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை எனவும் சத்தீஸ்கர் அரசு குற்றம் சாட்ட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கோவாக்சின் தடுப்பூசியின் குப்பியில் காலாவதி தேதி இல்லை என குற்றம் சாட்டுவது ஆதாரமற்றது என நிராகரித்துள்ள அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதிலும் சத்தீஸ்கர் அரசு மிகவும் பின் தங்கியுள்ளது என கூறியுள்ளார். மேலும் சோதனை தரவுகள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்புதான் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…