உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆண்டிராய்டு செயலியில் முக்கியமான செயலி டிக் டாக். இந்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு மோகம் அதிகமாகிவிடுகிறது. அது பலருக்கு பிரச்சனையாகி சில நேரம் உயிரிழப்புகள் எழும் அளவிற்கு ஆபத்தாகி விடுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியினை சேர்ந்தவர் சயீப். இவரது மனைவி பெயர் மஞ்சு. மஞ்சு டிக் டாக் செயலியை அதிகம் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அதனால், இருவருக்கும் பிரச்சனை ஆகி இருக்கிறது.
அதனால் இருவரும் பிரிந்து மஞ்சு அவரது தங்கை மனிஷா உடன் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் மஞ்சு டிக் டாக்கில் அவரது ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை கண்ட சயீப் தனது நண்பர் முஸ்தபா உடன் மஞ்சு தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சயீப்பிற்கும், மஞ்சுவிற்கும் சண்டை அதிகமாகியுள்ளது. அப்போது சயீப் தோசை கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டார். உடன் இருந்த மஞ்சுவின் தங்கை மனிஷாவையும் அடித்து கொலை செய்துவிட்டு, சயீப் மற்றும் முஸ்தபா இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…