Categories: இந்தியா

நாளை மறுநாள் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாளை மறுநாள் பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிவித்தார். கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முடிவு எட்டப்பட்டது.

முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், அறிவிப்பு வெளியானது. கார்கே, ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்களை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அறிவிக்கப்பட்டது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் எனவும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வரை டிகே சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்கிறார் சித்தராமையா (75). 2013-2018 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார்.

கர்நாடக மாநில துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சகராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் சித்தராமையா. இதுபோன்று, கர்நாடக மாநில துணை முதல்வராக பதவியேற்கும் டிகே சிவகுமார் பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர். கனகபுரம் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட டிகே சிவகுமார் (61) காங்கிரஸ் மாநில தலைவராகவும் உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

11 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

51 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago