Categories: இந்தியா

ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.!

Published by
கெளதம்

தெலுங்கானா : ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ராமோஜி குழும நிறுவனங்களின் த லைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார. வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது  உயிர் பிரிந்தது. தற்போது, அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் மு. க. ஸ்டாலின், ” பத்ம விபூஷன் திரு.ராமோஜி ராவ் காரு, அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ள ஸ்டாலின், இந்த துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தற்போது டெல்லி சென்றுள்ள முதல்வர் ரேவந்த், இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் முதன்முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்த முன்னோடி ஒருவருக்கு, அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்தப் பெருமையை ராமோஜி ராவ் பெற்றுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

12 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago