உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தை குறித்து பேசினார்.
கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ஹத்ராஸில் ஒரு தலித் பெண் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார். இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனைகளில் போராடி வந்தார். மேலும், ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் கற்பழிப்பு சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்வி குறியாக உள்ளது. இதனால், குற்றவாளிகள் வெளிப்படையான குற்றங்களைச் செய்கிறார்கள். இந்த சிறுமியைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், உத்தரபிரதேசத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வரான யோகியாதித்யநாத் நீங்கள் தான் பொறுப்பு என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…