டெல்லி வாசிகளை நெனச்சா “ரொம்ப பெருமையா இருக்கு!”- முதல்வர் கெஜ்ரிவால்!

Published by
Surya

பிளாஸ்மா தானம் செய்த டெல்லி மக்களை நினைத்து நான் பெருமைப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,09,140 ஆக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது எந்த வலியையும், பலவீனத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். இதனையடுத்து, பிளாஸ்மா தானம் செய்ய பலரும் முன்வந்திருந்தனர்.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், “மக்கள் பலரும் பிளாஸ்மா தானம் செய்ததை நான் கேட்கும்போது, டெல்லி மக்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனவே பிளாஸ்மா தானம் செய்த சிலரை வாழ்த்த முடிவு செய்தேன். அதன்படி, பிளாஸ்மா தானம் செய்த ஸ்ரீஷ்டி மற்றும் பூமிகாவுடனான நான் பேசியதை கேளுங்கள்” என தெரிவித்தார்.

அந்த ஆடியோ கிளிப்பில், கொரோனா குணமடைந்த நோயாளி ஸ்ரிஷ்டி ஐந்து நாட்களுக்கு கொரோனா அறிகுறிகளை உணர்ந்ததாகக் கூறினார். ஆனால் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார். பிளாஸ்மா தானம் செய்தற்காக முதல்வர் கெஜ்ரிவால், அவரைப் பாராட்டினார். மேலும் அவர், அந்த பெண்ணைப்பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார்.

பிளாஸ்மாவை தானம் செய்ய மக்களை ஊக்குவித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீஷ்டி, ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்தும் பாராட்டினார்.

தனக்கு பலவீனம் அல்லது வலி எதுவும் ஏற்படவில்லை எனவும், பிளாஸ்மா வங்கியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மிகவும் உதவியாக இருந்ததாகவும், முழு செயல்முறையிலும் அவருக்கு வழிகாட்டியதாகவும் ஸ்ரீஷ்டி கூறினார்.

அதுமட்டுமின்றி, மருத்துவமனை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இல்லை எனவும், அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றதாகவும் ஸ்ரீஷ்டி கூறினார்.

மேலும், பிளாஸ்மாவை தானம் செய்ய குணமடைந்த தனது அண்டை வீட்டாரையும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

Published by
Surya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

16 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago