மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிபிஎம் கட்சிக்கு நட்பாக இருக்கும் தேசிய அளவில் உள்ள தலைவர்களை அழைக்க கட்சி முடிவு செய்து இருந்தது. அதன்படி, கேரள அறநிலைய துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிபிஎம் கட்சியின் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிபிஎம் கட்சி இடம் உறுதியளித்தார்.
கேரளா சென்ற முதல்வருக்கு பலத்த வரவேற்பு
இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் கேரளா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள அமைச்சர்கள் தலைமையிலான குழு பலத்த வரவேற்பு அளித்தது. அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து சிவப்புத் துண்டு போர்த்தி வரவேற்பு அளித்தார்.
சிவப்பு கொடி காட்டி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் அவர்கள் பெரிய கூலிங்கிளாஸ் அணிந்தபடி வெளியே வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கொடியை காட்டி பலத்த வரவேற்பளித்தனர். மேலும் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படங்களை வைத்து கண்ணூரில் சில இடங்களில் கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை நடைபெறவுள்ள மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…