டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் ,தமிழக முதல்வர் பழனிசாமி.
நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் , முதல்வர் பழனிசாமி .டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அரசியல் ரீதியில் கூட்டணி விவகாரங்கள் ,தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…