நாட்டையே தினமும் சோகத்தில் ஆழ்த்தி வரும் பீகார் மாநில மூளைக் காய்ச்சளால் குழந்தைகள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இதுவரையில் 141 பிஞ்சுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த துயரம் சம்பவம் காரணமாக மனோகர் பிரதாப் என்கின்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தான் இந்த உயிரிழப்பு நேரிட்டுள்ளது மற்றும் உயிரிழப்புகளை தடுக்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாக அவர் தனது தரப்பில் இருந்து கூறி இருந்தார்.
மேலும் அவர் தனது மனுவில் குழந்தைகளின் இந்த நோயை தடுக்க எந்தவிதமான மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவருடைய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது மட்டுமல்லாமல் மத்திய மற்றும் பீகார் அரசுகள் குழந்தைகளின் உயிரை கொன்று குவித்த இந்த மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் மேலும் என்ன மருத்துவ வசதிகள் அவர்களுக்கு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன சத்துணவு கொடுக்கப்படுகிறது.மேலும் அரசுகள் சுகாதார குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பவை குறித்த அறிக்கையை விரிவாக தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…