எருமை பயிர்களை சேதப்படுத்தியதற்காக சிறுவன் அடித்து கொலை.! 3 பேர் மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகாப்பூரில் கரும்பு பயிர்களை எருமை சேதப்படுத்தியதற்காக 15 வயது சிறுவன் 3பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஷாஜகாப்பூரில் உள்ள சிசையா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலையளவில் 15 வயதான குல்தீப் யாதவ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது, அவனது எருமை மாடு அருகிலுள்ள சாது சிங் மற்றும் அவரது சகோதரர் தர்மேந்திரா சிங் ஆகிய விவசாயிகளின் கரும்பு வயலுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

அதனையடுத்து எருமையை பிடித்த சாதுசிங் மற்றும் அவரது சகோதரர் சிறுவனிடம் எருமையை தர மறுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து சாது சிங், தர்மேந்திர சிங் மற்றும் அவரது மகன் பூபிந்தர் ஆகியோர் இணைந்து சிறுவனை சரமாரியாக குச்சியால் அடித்துள்ளனர். இதனால், அந்த சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இதையடுத்து,  சிறுவனை தாக்கிய மூவரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர்,  சிறுவனின் தந்தை மகேஷ் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது நிலை மோசமாக இருந்ததால் உயிரிழந்துள்ளார். மகனின் கொலைக்கு காரணமான மூவரை கைது செய்ய வலியுறுத்தி தந்தை அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான தன்வீர் கானுடன் இணைந்து எஸ். எஸ். பி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி(எஸ். எச். ஓ) ஜாக் நரேன், சிறுவனை கொன்ற மூவரின் மீது ஐபிசி 302(கொலை) பிரிவின் கீழ் FIR பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

7 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

8 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

9 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

10 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

11 hours ago