இந்தியாவில் குறையும் சீன மொபைலின் சந்தை மதிப்பு.. 72 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!

Published by
Surya

இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் பலரும் சீன பொருட்களை பயன்படுத்துவதை புறக்கணித்தனர். மேலும் சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதில், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்த நிலையில், இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 சீனா செயலிகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்த அந்த செயலிகள் அனைத்தும் நீக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களுக்கும் தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. அதனையடுத்து, சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தநிலையில், ஜனவரி – மார்ச் காலாண்டில் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அதுமட்டுமின்றி, கவுன்ட்டர் பாயிண்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, சீன நிறுவனங்களில் சந்தை மதிப்பு இந்தியாவில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், இந்தியாவில் 10 சதவீதம் வளர்ச்சியை கண்டது.
இதன்மூலம், சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், 1.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் சியோமி நிறுவனம், இந்தியாவில் 29 சதவீதம் சந்தைப் பங்கைக் கொண்டுள்ள நிலையில், தற்பொழுது அதன் சந்தை மதிப்பு, 1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

மேலும் விவோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17 சதவீதமாகவும், ரியல்மீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 சதவீதமாகவும், ஒப்போ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 சதவீதமாகவும் உள்ளது. இந்தநிலையில், சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.

Published by
Surya

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago