திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்கக் கோரியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த மோதலில் பாஜக எம்எல்ஏ மனோஜ் திக்கா தாக்கப்பட்டார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜும்தாருக்கும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சுபேந்து அதிகாரி, மனோஜ் திக்கா, ஷங்கர் கோஷ், தீபக் பர்மன் மற்றும் நர்ஹரி மஹதோ உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்கள் எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டதாகவும், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் பாஜக தலைவர் சுபேந்து அதிகாரி கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோவை பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதை காணலாம்.
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…