தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்கள் நியமித்தது காங்கிரஸ்.
அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒருசில மாதங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதற்காக அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்திற்கு பூபேஷ் பாகேல், முகுல் வாஸ்னிக், ஷகீல் அகமது கான், கேரளா மாநிலத்திற்கு அசோக் கெஹ்லோட், லூய்சினோ ஃபாலிரோ, ஜி.பரமேஸ்வரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, நிதின் ரவுத், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹரி பிரசாத், ஆலம்கீர் ஆலம், விஜய் இந்தர் சிங்லா போன்றவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…