Categories: இந்தியா

மணிப்பூரில் ராகுல் காந்திக்கு தடை – காங்கிரஸ் கண்டனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தடை. 

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்துக்கு ஏற்பட்ட மோதல் கலவமரக வெடித்தது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், வன்முறை ஓய்ந்தபாடு இல்லை. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்ததில் கிட்டத்தட்ட 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது மணிப்பூர் அரசு. இந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அங்கு நேரில் சென்று விசாரிக்க இம்பால் சென்றடைந்துள்ளார். வன்முறையில் பாதித்து முகாமில் உள்ள மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்க ராகுல் காந்தி மணிப்பூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில், மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இம்பால் விமான நிலையத்தில் இருந்து சூரசந்த்பூர் சென்ற ராகுலை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்று கொண்டிருந்தார் ராகுல் காந்தி.

மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுலை அனுமதிக்கும் நிலையில் இல்லை என கூறி வாகனங்களை தடுத்துள்ளது போலீஸ் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை எதற்காக தடுத்தார்கள் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார், ராகுலை சந்திக்க சாலையின் இருபுறமும் மக்கள் காத்திருக்கின்றனர் என்றுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

14 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago