விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் காங்கிரஸ் துரோகம்; கர்நாடகாவில் பிரதமர் பேச்சு.!

Published by
Muthu Kumar

கர்நாடகாவின் இந்தத் தேர்தல் எம்.எல்.ஏ., அமைச்சர், அல்லது முதல்வரை தேர்வு செய்வதற்கு மட்டுமல்ல, வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தவே என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ஆளும்கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பலத்த போட்டியிடுகின்றன.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தில் உள்ள சன்னபட்டானாவில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் ஊழலுக்கு எதிராக போராடுவதால் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது, என்னை அவதூறாக பேசுகின்றனர். கர்நாடக மக்கள் இதற்கு தேர்தலில் வாக்குப்பதிவில் பதிலடி கொடுப்பார்கள்

விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளனர். கர்நாடகாவில் ஜேடிஎஸ்(ஜனதா தளம்) தன்னை ‘கிங்மேக்கர்’ என்று அழைக்கிறது, மேலும் ஜேடிஎஸ்-க்கு ஒவ்வொரு வாக்கும் காங்கிரசுக்கு  வாக்குகளை சேர்க்கிறது. காங்கிரஸ் ஏழைகளை புறக்கணித்தது. ஆனால் பாஜக விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக பாடுபடுகிறது என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஊழலை மட்டுமே ஊக்குவிக்கின்றன, மேலும் கர்நாடகாவின் இந்தத் தேர்தல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ., அமைச்சர், அல்லது முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தவே இந்தத் தேர்தல் என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

9 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

31 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

56 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

4 hours ago